இலங்கை

கிளிநொச்சியில் ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு!

Published

on

கிளிநொச்சியில் ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி ஏ9 வீதியில் கரபோக்கிற்கும் பரந்தன் சந்திக்கும் இடையில்
இன்று(29) அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ
இடத்திலேயே பலியானதோடு, மற்றுமொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

 யாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேரூந்து பரந்தன்
அரச விதை உற்பத்தி நிலையத்திற்கு முன்பாக உள்ள தரிப்பிடத்தில் நிறுத்திய
போது பின்னால் வந்த ரிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து
பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

 இதே வேளை ரிப்பருக்கு பின்னால்
வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து ரிப்பருடன் மோதி
விபத்துக்குள்ளானது. 

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ
.இடதிலேயே பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி
வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

 மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களிடம் கசிப்பு காணப்பட்டதாக தெரிவித்த
பொலீஸார். காயமடைந்து காணப்பட்டவரை அவசர நோயாளர் காவு வண்டிக்கு
அறிவி்த்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு கூடியிருந்த பொது மக்கள்
நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததோடு.

Advertisement

 புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தனர். நாங்கள் சம்பவ இடத்திற்கு
சென்றபின்னரே நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து படுகாயமடைந்த நபரை
வைத்தியசாலைக்க அனுப்பி வைத்ததோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றோம் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version