இலங்கை

தமிழர் பகுதியொன்றில் கோர விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர்

Published

on

தமிழர் பகுதியொன்றில் கோர விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர்

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் பகுதியில் வைத்து , மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையைவிட்டு விலகி அருகிலுள்ள வயலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Advertisement

குறித்த விபத்துச் சம்பவம் இன்று  (29) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மூதூர் பகுதியைச் சேர்ந்தவர்  என தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version