இலங்கை
பொது இடங்களில் வெற்றிலைத் துப்பல்; இனிச் சட்டம் பாயும்!
பொது இடங்களில் வெற்றிலைத் துப்பல்; இனிச் சட்டம் பாயும்!
வெற்றிலை உண்டு பொது இடங்களில் எச்சில் உமிழும் நபர்களுக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்கும் பணியை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் பஸ் தரிப்பிடங்கள், பொதுஇடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிலை எச்சில்களை அதிகமாகக் காணக்கூடியதாக உள்ளது. இந்த விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளும் கடந்தகாலத்தில் எடுக்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் பொது இடங்களில் வெற்றிலை மென்று எச்சில் உமிழ்பவர்களுக்கு எதிராகச் சட்டநடவடிக்கையை எடுக்கவுள்ளது. வெற்றிலை எச்சிலைப் பொது இடங்களில் உமிழும் நபர்களுக்கு எதிராக குறைந்தபட்டசம் 3 ஆயிரம் ரூபாவும் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாவும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.