உலகம்

போலந்தில் பயிற்சியின் போது விபத்துக்குள்ளான போர் விமானம் – விமானி பலி

Published

on

போலந்தில் பயிற்சியின் போது விபத்துக்குள்ளான போர் விமானம் – விமானி பலி

போலந்து ராணுவத்தில் அதிநவீன எப்-16 ரக போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் ரடோம் நகரில் அடுத்த வாரம் விமான வான்சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போர் விமானங்கள், சிறியரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என பல பங்கேற்க உள்ளன. இதற்கான பயிற்சி நேற்று நடைபெற்றது. இதில், எப்-16 ரக போர் விமானம் உள்பட பல்வேறு விமானங்கள் பங்கேற்றன.

Advertisement

இந்நிலையில், பயிற்சியின்போது திடீரென எப்-16 போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version