இலங்கை
வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய பாதாளக் குழுவினர் கைதுசெய்யப்படுவர்!
வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய பாதாளக் குழுவினர் கைதுசெய்யப்படுவர்!
பாதாளக் குழுவினருக்கு தற்போது அரசியற் பாதுகாப்புக் கிடைக்காததா தப்பிச்சென்றுள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் பிரியந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
பாதாளக் குழுவினருக்கு கடந்த காலங்களில் அரசியற் பாதுகாப்பு இருந்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் அந்த அரசியற்பாதுகாப்பு இல்லாமல் போனதையடுத்து அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்றனர். அங்கிருந்தவாறு இலங்கையில் குற்றச்செயல்களை வழிநடத்தினர். தற்போது அவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதாளக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வெளிநாட்டுத்தொடர்பு அவசியம். எனவே, வெளிநாட் டுத் தூதகரங்களுடன் பொலிஸார் சிறந்த உறவைப் பேணிவருகின்றனர். டுபாய், ஓமான், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தலைமறைவாகி உள்ள பாதாளக் குழுவினரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் – என்றார்.