இலங்கை

வேகக் கட்டுப்பாட்டையிழந்து வயலுக்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள் – மூதூரில் சம்பவம்!

Published

on

வேகக் கட்டுப்பாட்டையிழந்து வயலுக்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள் – மூதூரில் சம்பவம்!

வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் வயலுக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். 

இந்த விபத்துச் சம்பவம் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் 1.30 மணியளவில் சம்பவித்துள்ளது. 

Advertisement

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த அவரை  அவசர நோயாளர் காவு வண்டி மூலம் மூதூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மூதூர் பகுதியைச் சேர்ந்த யோகநாதன் ( வயது -42) என தெரியவருகிறது.

விபத்து  தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version