இலங்கை
457அரசு நிறுவனங்களில் ஊழல் முறைகேடுகள்; விசாரணை துரிதம்!
457அரசு நிறுவனங்களில் ஊழல் முறைகேடுகள்; விசாரணை துரிதம்!
457 அரசு நிறுவனங்களின் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தப் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவான கோப்குழு முடிவு செய்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, அந்த 457 நிறுவனங்களின் கணக்காய்வு அறிக்கைகளை விரைவாகப் பெற நட வடிக்கை எடுக்கப்படும் என்று கோப் குழுவின் தலைவர் நிஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில், கோப் குழுவால் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மட்டுமே விசாரிக்கப்பட்டன, மேலும் சில நிறுவனங்கள் தவிர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. அதிக ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் நடந்த நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றை விரைவில் குழுவின் முன் வரவழைத்து விசாரணை நடத்தப்படவுள்ளது.