இலங்கை
இந்தோனேஷியாவில் கைதுசெய்யப்பட்டவர்கள் இலங்கைக்கு
இந்தோனேஷியாவில் கைதுசெய்யப்பட்டவர்கள் இலங்கைக்கு
இந்தோனேஷியாவில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து குற்றக்குழு உறுப்பினர்கள் கொண்ட விமானம் நாட்டுக்கு வரவுள்ளது.
குற்றக்குழு உறுப்பினர்கள் கொண்ட விமானம் , இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் புறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ்குழு இன்று (30) இந்தோனேஷியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.