இலங்கை

களுத்துறை கடற்கரை பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

Published

on

களுத்துறை கடற்கரை பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரை பகுதியில் இருந்து இன்று சனிக்கிழமை (30) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்கரை பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Advertisement

55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement

இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version