இலங்கை

திருகோணமலை விபத்தில் இருவர் படுகாயம்

Published

on

திருகோணமலை விபத்தில் இருவர் படுகாயம்

  திருகோணமலை – திருஞானசம்பந்தர் வீதியில் இன்று (30) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சோனகவாடி பகுதியில் இருந்து சிவன்கோவில் பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி வடிகானுக்குள் வீழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

Advertisement

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version