இலங்கை

அறுகம்குடாவில் இரண்டு இஸ்ரேலியர்கள் கைது!

Published

on

அறுகம்குடாவில் இரண்டு இஸ்ரேலியர்கள் கைது!

அறுகம்குடாவில் விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் பொத்துவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குப் பின்னர் காயமடைந்ததாக கூறப்படும் தம்பதியினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Advertisement

அத்துடன், கைதான சந்தேகநபர்கள் இருவரும் 26 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

விருந்தகத்தின் உரிமையாளரும் அவரது மனைவியும் தங்கள் வாகனத்தில் பயணித்த போது, இரண்டு இஸ்ரேலியர்களும் வீதியை வழிமறித்ததால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் அது தாக்குதலாக மாறியதாக பொலிஸார் கூறுகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version