இலங்கை
செம்மணி மனிதப் புதை! இன்று மேலும் ஒன்பது எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனிதப் புதை! இன்று மேலும் ஒன்பது எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ் அரியாலை – சித்துப்பாத்தி செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று ஒன்பது மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 09 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இதுவரை 218 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 198 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 40வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை