இலங்கை

தமிழர் பகுதி பாடசாலையொன்றில் தீ விபத்து ; எரிந்து கருகிய பெறுமதியான உபகரணங்கள்

Published

on

தமிழர் பகுதி பாடசாலையொன்றில் தீ விபத்து ; எரிந்து கருகிய பெறுமதியான உபகரணங்கள்

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் நேற்று (01) பகல் தீ பரவல் ஏற்பட்டு பாடசாலை உபகரணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

குறித்த விபத்துச் சம்பவத்திற்கு மின் ஒழுக்கு காரணமாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

Advertisement

தீ பரவியதையடுத்து பொதுமக்கள், பிரதேச சபை ஊழியர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் இணைந்து நீரினைக் கொண்டு தீயை அணைத்து தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சுமார் அரை மணி நேர போராட்டத்தின் பின்னர் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்போது மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் காணப்பட்ட கதிரை,மேசை,ஏனைய பெறுமதியான பல உபகரணங்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன.

Advertisement

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version