இலங்கை

பொரளையில் 03 பெண்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் அதிகாரி!

Published

on

பொரளையில் 03 பெண்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் அதிகாரி!

பொரளையில் உள்ள ஒரு மசாஜ் பார்லரில் அத்துமீறி நுழைந்த இருவர் அங்கிருந்த மூன்று பெண்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பணியில் இருந்து நீக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் போலீஸ் சிறப்பு பணியக தலைமையகத்தில் பணிப்புரியம் அதிகாரி ஒருவரே மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Advertisement

இதில் தற்போது கடமையில் உள்ள அதிகாரி  தப்பிச் செல்ல முயன்றபோது மேல் மாடியில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளதாகவும், தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

தலைமறைவாக உள்ள இரண்டாவது சந்தேக நபர், பணியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் போலீஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

 இந்த சம்பவம் குறித்து பொரளை போலீசார் மற்றும் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version