இலங்கை

மீண்டும் கைகோர்க்கும் ரணில் – சஜித் பிரேமதாச; மஹிந்த , மைத்திரிக்கும் அழைப்பு

Published

on

மீண்டும் கைகோர்க்கும் ரணில் – சஜித் பிரேமதாச; மஹிந்த , மைத்திரிக்கும் அழைப்பு

   ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிச் சென்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது விதிக்கப்பட்ட இடைநிறுத்த உத்தரவை நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இந்த நடவடிக்கை ஒற்றுமையை நோக்கி எடுக்கப்பட்ட முதல் படி என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டுக்கு அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் இந்த மாநாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version