இலங்கை
செம்மணிப் புதைகுழியில் 9 என்புத்தொகுதிகள் நேற்றும் அடையாளம்
செம்மணிப் புதைகுழியில் 9 என்புத்தொகுதிகள் நேற்றும் அடையாளம்
அரியாலை செம்மணிப் புதைகுழியில் இருந்து, நேற்று மேலும் 9 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரியாலை செம்மணிப் புதைகுழி மீதான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 40ஆவது நாள் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே, மேலும் 9 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளில் 7 என்புத் தொகுதிகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணிப் புதைகுழியில் இருந்து இதுவரை 218 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 198 என்புத்தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.