இலங்கை
பத்மே உள்ளிட்ட ஐவர் 72 மணிநேரத்தடுப்பில்!
பத்மே உள்ளிட்ட ஐவர் 72 மணிநேரத்தடுப்பில்!
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஐவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் 72 மணி நேரத் தடுப்பு காவல் உத்தரவுக்கமைய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் .
அவர்கள் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 27 ஆம் திகதி இந்தோனேசியாவில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 பேர் அந்த நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கைப் பொலிஸார் பொறுப்பேற்று இலங்கைக்கு விமானம் ஊடாகக் கொண்டுவரப்பட்டனர்.