உலகம்

இந்தியப் பயணத்தை இரத்துச்செய்த ட்ரம்ப்!

Published

on

இந்தியப் பயணத்தை இரத்துச்செய்த ட்ரம்ப்!

குவாட்உச்சி மாநாட்டில் பங்கேற்க நவம்பரில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவிருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா-இந்தியா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் பிரச்சினையால் ட்ரம்ப் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார் என்று கூறப்படுகின்றது. இதேவேளை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் மசகு எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி இந்தியாவிற்கு ட்ரம்ப் 50 வீதவரி விதித்துள்ளதை அடுத்து இந்தியா – அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் ஷங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் மோடி சீனா சென்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது இந்தியா பயணத்தை இரத்துச் செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version