உலகம்

இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை வாங்கும் – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

Published

on

இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை வாங்கும் – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி சிக்கனமாக இருப்பதால், இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை வாங்கும் என்று இந்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

மாஸ்கோவிலிருந்து எரிசக்தி கொள்முதல் காரணமாக இந்தியப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரிகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்த போதிலும், இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. 

Advertisement

இந்நிலையில் இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளர் மற்றும் நுகர்வோர் நாடான இந்தியா, ரஷ்ய விநியோகங்களைத் தவிர்க்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.

 “எங்களுக்கு மிகவும் பொருத்தமான (விநியோக மூலத்திலிருந்து) ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும். எனவே நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அதை வாங்குவோம்,” என்று அவர் கூறினார், இந்தியா தனது அந்நியச் செலாவணியின் பெரும்பகுதியை கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை வாங்குவதற்கு செலவிடுகிறது என்றும் கூறினார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version