வணிகம்

தங்கத்தின் விலை மீண்டும் உச்சம்: சவரனுக்கு ரூ. 83 ஆயிரம் நெருங்கி விற்பனை

Published

on

தங்கத்தின் விலை மீண்டும் உச்சம்: சவரனுக்கு ரூ. 83 ஆயிரம் நெருங்கி விற்பனை

உலகளாவிய போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளை விட தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாக கருதுவதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.கடந்த செப்டம்பர் 16 அன்று ஒரு சவரன் தங்கம் ₹82,000-ஐ தாண்டி வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இந்நிலையில், நேற்று முன்தினம் ₹480 உயர்ந்து ஒரு சவரன் ₹82,320-க்கு விற்பனையானது.இன்றைய நிலவரம்இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை, தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹82,880-க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹70 உயர்ந்து, ₹10,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளியின் விலையும் ஏறுமுகம்!தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ₹143-க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளி, இன்று கிராமுக்கு ₹3 உயர்ந்து ₹148-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹3,000 உயர்ந்து, தற்போது ₹1,48,000-க்கு விற்பனையாகிறது.இந்த தொடர் விலை உயர்வு, தங்கத்தின் மீதான முதலீடுகளை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version