இந்தியா
அ.தி.மு.க. தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
அ.தி.மு.க. தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு மின்னஞ்சல் மூலம் குறித்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மோப்பநாய் உதவியுடன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொலிஸார் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.