வணிகம்
‘H1B விசா கவலையை விடுங்க… திறமை இருந்தா இங்க வாங்க’: இந்தியர்களுக்கு ஜெர்மனி சிவப்புக் கம்பளம்
‘H1B விசா கவலையை விடுங்க… திறமை இருந்தா இங்க வாங்க’: இந்தியர்களுக்கு ஜெர்மனி சிவப்புக் கம்பளம்
இந்தியர்கள் ஜெர்மனியில் வேலை தேடுவது இப்போது பெருகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், ஜெர்மனியின் வலுவான பொருளாதாரமும், அங்குள்ள உறுதியான வேலைவாய்ப்பு கொள்கைகளும் தான். ஜெர்மனியில் பணிபுரியும் இந்தியர்கள், ஜெர்மானியர்களை விடவும் அதிக சம்பளம் பெறுகிறார்கள் என்று ஜெர்மனிக்கான தூதர் ஃபிலிப் அக்கர்மேன் தெரிவித்திருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ஜெர்மன் தூதர் கூறுவது என்ன?ஃபிலிப் அக்கர்மேன், தனது X பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், “இந்தியர்கள் ஜெர்மனியில் வேலை தேடுவது மட்டுமல்ல, தங்கள் பணிகளில் சிறப்பாகவும் செயல்படுகிறார்கள். ஜெர்மனியில் அதிக வருமானம் ஈட்டுபவர்களில் இந்தியர்களும் முன்னணியில் இருக்கிறார்கள்.ஜெர்மனியில் பணிபுரியும் சராசரி இந்தியரின் வருமானம், ஜெர்மனியில் பணிபுரியும் சராசரி ஜெர்மானியரின் வருமானத்தை விட அதிகமாக உள்ளது. இது மிகவும் நல்ல செய்தி. இந்த அதிக சம்பளம், இந்திய நிபுணர்கள் ஜெர்மனியின் வளர்ச்சிக்கு எவ்வளவு பெரிய அளவில் பங்களிக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது” என்று அவர் கூறினார்.Here is my call to all highly skilled Indians. Germany stands out with its stable migration policies, and with great job opportunities for Indians in IT, management, science and tech.Find your way to Germany to boost your career: https://t.co/u5CmmrHtoFpic.twitter.com/HYiwX2iwMEஜெர்மனியின் குடியேற்ற கொள்கைகள்: ஒரு ஜெர்மன் கார் போல!ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம், அதன் நிலையான கொள்கைகள். இந்த கொள்கைகளை, ஜெர்மன் தூதர் அக்கர்மேன் ஒரு சுவாரஸ்யமான உவமையுடன் விளக்கினார். “எங்கள் குடியேற்ற கொள்கை ஒரு ஜெர்மன் காரைப் போன்றது. அது நம்பகமானது, நவீனமானது, கணிக்கக்கூடியது. அது நேர் கோட்டில் மட்டுமே செல்லும், வளைந்து நெளிந்து செல்லாது. மேலும், முழு வேகத்தில் செல்லும் போது திடீரென பிரேக் போட்டு நிற்காது,” என்று அவர் கூறினார்.இதன் மூலம், ஜெர்மனியின் வேலைவாய்ப்பு விதிகள் திடீரென மாறாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். வெளிநாட்டு நிபுணர்கள் இங்கு நீண்டகாலம் தங்குவதற்கான நம்பிக்கையை இது அளிப்பதாக அவர் உறுதியளித்தார்.இந்திய நிபுணர்களுக்கு அழைப்பு!ஜெர்மனியில் ஐ.டி., மேலாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் திறமையான ஊழியர்களுக்கு அதிக தேவை உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப, இந்தியா ஒரு முக்கிய பங்குதாரராக விளங்குகிறது. ஃபிலிப் அக்கர்மேன், இந்தியாவில் உள்ள நிபுணர்களை ஜெர்மனியில் உள்ள வாய்ப்புகளை ஆராய அழைப்பு விடுத்தார். மேலும், “ஜெர்மனி உங்களுக்கு என்ன வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்ள, கீழே உள்ள இணைப்பைப் பார்க்கவும். ஆச்சரியமான வாய்ப்புகளை நீங்கள் காணலாம்” என்று கூறினார்.அவர் பகிர்ந்து கொண்ட இணைப்பில், linktr.eegermanyinindia என்ற இணையதளம் உள்ளது.இந்தியாவின் திறமையான நிபுணர்கள் இப்போது உலகம் முழுவதும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஜெர்மனி, அதன் வலுவான தொழில்துறை மற்றும் உறுதியான கொள்கைகளால், இந்தியர்களுக்கு ஒரு சிறந்த இடமாக மாறி வருகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.