இலங்கை

காட்டுக்குச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

Published

on

காட்டுக்குச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 70 வயதான முதியவர் ஒருவர் நேற்று (24) காணாமல்போன நிலையில், இன்று (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த முதியவர் நேற்றைய தினம் தனது வீட்டிற்குத் தேவையான விறகை தேடுவதற்காக அருகில் உள்ள காட்டுக்குச் சென்றுள்ளார். எனினும், அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

முதியவர் வீட்டுக்கு வராத காரணத்தினால் அவரது உறவினர்கள் அவரைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை அந்த முதியவர் சடலமாக அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் காணாமல்போன முதியவரே என அவரது உறவினர்கள் உறுதிப்படுத்திக்கொண்டதைத் தொடர்ந்து, சடலம் தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version