உலகம்

ட்ரோன்கள் பறந்ததால் மூடப்பட்ட டென்மார்க் விமான நிலையம்!

Published

on

ட்ரோன்கள் பறந்ததால் மூடப்பட்ட டென்மார்க் விமான நிலையம்!

டென்மார்க்கின் வடக்கே உள்ள ஆல்போர்க் விமான நிலையம், அதன் வான்வெளியில் அங்கீகரிக்கப்படாத ட்ரோன்கள் காணப்பட்டதை அடுத்து மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மூன்று சிறிய விமான நிலையங்களான எஸ்ப்ஜெர்க், சோண்டர்போர்க் மற்றும் ஸ்க்ரிட்ஸ்ட்ரப் ஆகியவையும் ட்ரோன் செயல்பாட்டுகள் குறித்து முறைப்பாடு அளித்துள்ளன. ஆனால் அவை மூடப்படவில்லை. இந்த வார தொடக்கத்தில் நாட்டின் கோபன்ஹேகன் விமான நிலையம் ட்ரோன் ஊடுருவல் காரணமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை டென்மொர்க் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version