இந்தியா

பா.ஜ.க அலுவலகத்திற்கு தீ வைப்பு!

Published

on

பா.ஜ.க அலுவலகத்திற்கு தீ வைப்பு!

லடாக்கில், யூனியன் பிரதேசமாக தனி மாநில அந்தஸ்து வழங்கி அரசியலமைப்பின் 6ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் எனக்கோரி பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக  கடந்த 10ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்று வருகிறது.

மேலும் அடுத்த மாதம் ஒக்டோபர் 6ஆம் திகதி மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால், இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்றுக் காலை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Advertisement

இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கும் தீயணைப்பு பொலிஸாருக்கும்  இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து  சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். இதன்போது  பொலிஸாரின்  வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டதுடன், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பா.ஜ.க அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில்  பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதிக்கு  பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version