இலங்கை
தனியார் பஸ்களில் ‘டிக்கெற்’ கட்டாயம்
தனியார் பஸ்களில் ‘டிக்கெற்’ கட்டாயம்
அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும் என மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
பயணச்சீட்டு வழங்காத நடத்துநர்கள் மற்றும் பயணச்சீட்டுகளைப் பெறாத பயணிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.