இலங்கை
புதிய நெல் வர்க்கச்செய்கை கிளிநொச்சியில் அறுவடை!
புதிய நெல் வர்க்கச்செய்கை கிளிநொச்சியில் அறுவடை!
கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியான காலநிலைக்குச்செய்கை மேற்கொள்ளக்கூடிய புதிய நெல் வர்க்கமான பிஜி-377 (வெள்ளை) நெல்லில் பரீட்சாத்தமாகச் செய்கை மேற்கொள்ளப்பட்டு அதன் அறுவடை விழா புளியம்பொக்கணை பகுதியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
புளியம்பொக்கணைப்பகுதி விவசாயப் போதனாசிரியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டப் பிரதி விவசாயப்பணிப்பாளர் வி.சோதி லட்சுமி கலந்துகொண்டார்.
நிகழ்வில் கண்டாவளை கமநலசேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர், பாடவிதான உத்தியோகத்தர் க.பிரதீபன்,விவசாயப் போதனாசிரியர்கள், கமக்கார அமைப்புப் பிரதிநிதிகள், பொது அமைப்பு சார்ந்தோர் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.