இலங்கை

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு உடனடி தீர்வு இல்லை

Published

on

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு உடனடி தீர்வு இல்லை

   யாழ்ப்பாணம் – தையிட்டி விகாரை பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலை கலாசாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் தலையீட்டின் ஊடாக தையிட்டி விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் ஹினிதும சுனில் தெரிவித்தார்.

Advertisement

யாழ்ப்பாணம் தையிட்டி பிரதேசத்தில் உள்ள திஸ்ஸ விகாரை பதிவு செய்யப்படவில்லை. இந்த விகாரையின் காணி தொடர்பான விடயங்கள் ஆராயப்படுகிறன.

இந்த பகுதியில் இடம்பெறும் போராட்டங்கள் குறித்து அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை என்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலை கலாசாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version