இலங்கை

நாரஹேன்பிட்டி ரயில் நிலைய நவீனமயமாக்கல் திட்டம் ஆரம்பம்

Published

on

நாரஹேன்பிட்டி ரயில் நிலைய நவீனமயமாக்கல் திட்டம் ஆரம்பம்

“Clean Sri Lanka” திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும் “Dream Destination” திட்டத்தின் கீழ் நாரஹேன்பிட்டி ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் இன்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

களனிவெளிரயில் மார்க்கத்தின் மற்றொரு தனித்துவமான ரயில் நிலையமாகக் நாரஹேன்பிட்டி ரயில் நிலையம் கருதப்படுகின்றது.

Advertisement

கொழும்பிலிருந்து 5.06 கி.மீ தொலைவிலும் கடல் மட்டத்திலிருந்து 3.72 மீ உயரத்திலும் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம், இரண்டு முக்கிய நடைமேடைகள் மற்றும் டிக்கெட் வழங்கும் ஒரு கருமபீடத்தையும் கொண்டுள்ளது.

அதன்படி, இந்த ரயில் நிலையத்தின் இரண்டு நடைமேடைகளையும் இணைக்கும் வகையிலான மேம்பாலத்தை நிர்மாணித்தல் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தனியார் துறையின் முழு ஆதரவுடன் இந்த நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version