இலங்கை

மன்னாரில் பொலிஸார் அராஜகம்; வைத்தியசாலையில் கைது நடவடிக்கையாம்

Published

on

மன்னாரில் பொலிஸார் அராஜகம்; வைத்தியசாலையில் கைது நடவடிக்கையாம்

    மன்னாரில் பொலிஸார் தங்கள் மீதான குற்றத்தை மறைக்கும் விதமாக பொதுமக்கள் மீது பல்வேறு விதமான பொய்யான வழக்குகளை தொடுத்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மன்னாரில்  காற்றாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  நேற்று (26) இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை பொலிஸார் கொடூரமாக தாக்கிய நிலையில் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த பொது மக்கள் நோயாளர்காவு வண்டி ஊடாக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் பொலிஸாரின் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலும் போராட்டத்தில் முன்னிறு செயற்படும் சமூக செயற்பாட்டாளர்கள் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனநாயக ரீதியாக நடைபெற்ற போராட்த்தில் அரஜகமாக மக்களை தாக்கியது மாத்திரம் இல்லாமல் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் பெலிஸார் மேற்கொண்டுள்ளமை மன்னார் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில் அமைதியான மக்கள் போராட்டத்தில் பெண்கள், மதகுருக்கள், பொதுமக்கள் மீது கண் மூடித்தனமான தக்குதலை மேற்கொண்ட பொலிஸார் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை போராட்டகுழு முன்னெடுக்கவுள்ளது.

Advertisement

அத்துடன் பொலிஸாரின் அராஜகம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் முறைப்பாட்டு பிரிவிலும் முறைப்பாடு மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version