இலங்கை

காசா பகுதியில் இனப்படுகொலைக்கு எதிராக மக்கள் பேரணி..

Published

on

காசா பகுதியில் இனப்படுகொலைக்கு எதிராக மக்கள் பேரணி..

காசா பகுதியில் இனப்படுகொலைக்கு ஜெர்மனி அளித்த ஆதரவை எதிர்த்து அந்நாட்டு தலைநகர் பெர்லினில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் பேரணி நடத்தினர்.

“சுதந்திரபாலஸ்தீனம்” என்று கோஷமிட்டனர், “காசாவில் இனப்படுகொலையை நிறுத்து” “பாலஸ்தீனத்திற்கு சுதந்திரம்” போன்ற வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகளை ஏந்திச் சென்றனர். 

Advertisement

பல போராட்டக்காரர்கள் பாலஸ்தீனக் கொடிகளையும் அசைத்தனர்.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய கணக்கெடுப்பில், காசாவில் போர் நடவடிக்கை இனப்படுகொலை என்று 62 சதவீத ஜெர்மன் வாக்காளர்கள் நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version