இலங்கை

ஜப்பானின் வர்த்தக பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி

Published

on

ஜப்பானின் வர்த்தக பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி

ஜப்பானிய வணிகத் தலைவர்களுடனான வட்டமேசை கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டார்.

இந்தக் கலந்துரையாடலில் JETROவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இஷிகுரோ நோரிஹிகோ (Ishiguro Norihiko) மற்றும் ஜப்பான்- இலங்கை வணிக ஒத்துழைப்புக் குழுவின் (JSLBCC) தலைவரும் ITOCHU கார்ப்பரேஷனின் தலைவருமான ஃபுமிஹிகோ கபயாஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்த அமர்வின் போது, ​​இலங்கையில் கிடைக்கும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மோசடி மற்றும் ஊழலை ஒழித்து முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் இதன்போது எடுத்துரைத்தார்.

இலங்கையின் முக்கிய பொருளாதார பங்காளிகளில் ஒன்றான இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது இரண்டு நாடுகளுக்கும் அத்தகைய ஒத்துழைப்பை கொண்டு வரும் பரஸ்பர நன்மைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version