இலங்கை
தமிழக மீனவர்கள் 12 பேருக்கு முதலாம் திகதிவரை மறியல்!
தமிழக மீனவர்கள் 12 பேருக்கு முதலாம் திகதிவரை மறியல்!
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட தமிழக மீன்வர்கள் 12 பேரும் எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை நெடுந்தீவுக்கு அருகே தமிழக மீனவர்கள் 12 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது. கைதுசெய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் ஊர்காவற்றுறை நீதிவானின் இல்லத்தில் நேற்று மாலை முற்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.