இலங்கை

நாடு முழுவதும் 664 பேர் கைது

Published

on

நாடு முழுவதும் 664 பேர் கைது

நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ் நேற்று 664 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இந்த நடவடிக்கையில் 28 ஆயிரத்து 778 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 254 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 163 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மது அருந்தி வாகனம் செலுத்துதல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் தொடர்பாக 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version