இலங்கை

மக்களுக்கு மதிப்பளிக்காது காற்றாலைத்திட்டம்;

Published

on

மக்களுக்கு மதிப்பளிக்காது காற்றாலைத்திட்டம்;

பொலிஸாரின் அடக்குமுறைக்கு ஐ.ம.சக்தி கண்டனம்

மன்னார் காற்றாலை விவகாரத்தில் அரசாங்சும் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளது. அந்த பிரதேச மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் மதத்தலைவர்கள்மீது தாக்குதல் நடத்தியுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
 

Advertisement

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
அதானி நிறுவனத்துடனான மன்னார் காற்றாலைத் திட்டத்தை கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்டது. இந்தக் கருத்திட்டத்தில் இருந்து விலகுவதாக தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் வடக்கு மாகாண மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது.

இலங்கையின் மிகப்பெரிய தீவாகக் கருதப்படும் மன்னார்த் தீவின் இயற்கை அம்சங்களை பாதுகாக்க வேண்டும். மன்னார் காற்றாலைக் கருத்திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளிப்படையான வகையில் சகல தரப்பினருடனும் கலந்துரையாடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் எவ்விதமான பேச்சுமின்றி கருத்திட்டத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளது. அந்தப் பிரதேச மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் மதத்தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளமை வன்மையாகக் கண்டித்தக்கது என்றார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version