இலங்கை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் உதய கம்மன்பில முறைப்பாடு!

Published

on

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் உதய கம்மன்பில முறைப்பாடு!

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில நேற்றுக்காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாதாந்திர சம்பளத்தை கட்சி நிதிக்கு மாற்றும் நடவடிக்கை தொடர்பிலேயே அவர் முறைப்பாடளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முறைப்பாடு அளித்த பின்னர் ஊடகங்களுக்கு உதயகம் மன்பில தெரிவித்ததாவது- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர கொடுப்பனவைத் தமது விருப்பப்படி செலவிட முடியாதுள்ளது. ஆளுங்கட்சியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதத்துக்கு 3 கோடி ரூபாவுக்கு மேல் பெற்று அதைக் கட்சி நிதியில் வரவுவைத்து அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது பொதுநிதியைத் தவறாக பயன்படுத்தும் செயலாகும். இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தக் கோரி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது – என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version