இலங்கை

கிளிநொச்சியில் இன்றும் வெடிக்காத கைக்குண்டுகள் மீட்பு

Published

on

கிளிநொச்சியில் இன்றும் வெடிக்காத கைக்குண்டுகள் மீட்பு

 கிளிநொச்சி – தட்டுவான் கொட்டி பகுதியில் இன்றும் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இருவர் மோட்டார் செல் குண்டொன்றை பிரித்து வெடிமருந்தை எடுக்க முற்பட்ட நிலையில் குண்டு வெடித்ததில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது, மேலும் சில வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீட்டெடுக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் பொலிஸார் அனுமதி கோரியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version