இலங்கை

தடுப்பு நிலையத்திலிருந்து தப்பியோடிய சிறுவர்களில் ஐவர் இரவோடிரவாக கைது

Published

on

தடுப்பு நிலையத்திலிருந்து தப்பியோடிய சிறுவர்களில் ஐவர் இரவோடிரவாக கைது

கம்பஹா – சபுகஸ்கந்த மாகொல சிறுவர் தடுப்பு நிலையத்திலிருந்து தப்பியோடிய 15 சிறுவர்களில் ஐவர் நேற்று (29) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த நிலையத்திலிருந்து தப்பியோடிய 15 சிறுவர்களில், 4 சிறுவர்களைத் தவிர, மீதி 11 சிறுவர்களும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

Advertisement

தப்பியோடியவர்களில் இருவர், ஏற்கனவே குறித்த நிலையத்திலிருந்து தப்பிச் சென்று பின்னர், நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடியவர்கள் 15 முதல் 17 வயதுக்குபட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version