இலங்கை

நவராத்திரி 6ம் நாளில் மகாலட்சுமியின் அருள் பெற வழிபாட்டு முறை

Published

on

நவராத்திரி 6ம் நாளில் மகாலட்சுமியின் அருள் பெற வழிபாட்டு முறை

நவராத்திரியின் 6 ஆம் நாள் என்பது நவராத்திரியில் மகாலட்சுமியை வழிபடக் கூடிய நிறைவான நாளாகும். இதற்கு பிறகு வரும் நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களிலும் நாம் கலைமகளான சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.

நவராத்திரியின் 6ம் நாளில் அம்பிகையை 7 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் வடிவமாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். இந்த நாளில் கன்னிகா பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாகும்.

Advertisement

இது அம்பிகையை நம்முடைய வீட்டை தேடி வரவைக்கும் அற்புமான வழிபாடாகும். அதே போல் அனைத்து விதமான செல்வங்களையும் பெறுவதற்கான நாளாகவும் இந்த நாள் கருதப்படுகிறது.

நவராத்திரியின் 6ம் நாள் என்பது மகாலட்சுமியிடம், நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் வேண்டி பெறுவதற்குரிய மிக முக்கியமான நாளாகும்.

நவராத்திரியின் 6ம் நாள் வழிபாடு என்பது எப்போதும் தனித்துவமான, விசேஷ பலனை தரக் கூடிய நாளாகும். நவராத்திரியின் 6ம் நாளில் அம்பிகையை எப்படி வழிபட வேண்டும், என்ன அலங்காரத்தில், என்ன மலர் மற்றும் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

Advertisement

அம்மனின் வடிவம் – சண்டிகா தேவி

கோலம் – கடலை மாவால் தேவியின் நாமத்தை கோலமிட வேண்டும்

மலர் – செம்பருத்தி

Advertisement

இலை – சந்தன இலை

நைவேத்தியம் – தேங்காய் சாதம்

சுண்டல் – பச்சை பயிறு சுண்டல்

Advertisement

பழம் – நார்த்தம்/ ஆரஞ்சு

ராகம் – நீலாம்பரி

நிறம் – கிளிப் பச்சை

Advertisement

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version