இலங்கை
ரக்பி வீரர் தாஜுதீன் படுகொலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
ரக்பி வீரர் தாஜுதீன் படுகொலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
முன்னாள் பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பில் அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
இதன்படி, ரக்பி வீரர் வசீம் தாஜுதீனை படுகொலை செய்ய வந்த குழுவில், சமீபத்தில் மித்தெனிய பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் படுகொலை செய்யப்பட்ட அருண விதானகமகே எனப்படும் ‘கஜ்ஜா’வும் இருந்துள்ளார்.
இந்த தகவலை பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் தெரிவித்தார்.
இன்று (30) பிற்பகல் பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.