இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்லவின் சொத்து குவிப்பு விவகாரம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Published

on

கெஹலிய ரம்புக்வெல்லவின் சொத்து குவிப்பு விவகாரம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது கிட்டத்தட்ட 97 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள  சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அக்டோபர் 15 ஆம் திகதி மேலும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 இந்த வழக்கு இன்று (01) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன் அழைக்கப்பட்டபோது,   கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். 

Advertisement

 பிரதிவாதி கெஹெலிய ரம்புக்வெல்ல சார்பில் ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் கலிங்க இந்ததிஸ்ஸ, பிரதிவாதி கோரிய 12 ஆவணங்களை அரசு தரப்பு இன்னும் தனக்கு வழங்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

அதன்படி, பிரதிவாதிக்கு உரிய ஆவணங்களை உடனடியாக வழங்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் உதவி இயக்குநர் ஜெனரலுக்கு அறிவுறுத்திய நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார். 

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version