இலங்கை

உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்காத மஹிந்த; சினத்தில் அரசாங்கம்

Published

on

உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்காத மஹிந்த; சினத்தில் அரசாங்கம்

   கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என்று அரசாங்கப் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயதிஸ்ஸ இது தொடர்பில் கூறுகையில்,

Advertisement

, மஹிந்த வளாகத்தை விட்டு வெளியேறி மூன்று வாரங்கள் ஆகின்றன என்றார்.

இந்த விவகாரத்திற்குப் பொறுப்பான அமைச்சகம் இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சர் கூறினார்.

அதேவேளை மஹிந்த ராஜபக்ஷ விரைவில் ஒரு புதிய வீட்டைக் கண்டுபிடித்து கொழும்புக்குத் திரும்பக்கூடும் என்று அமைச்சர் ஜெயதிஸ்ஸ  கூறினார்.

Advertisement

ஜனாதிபதியின் உரிமைகள் (ரத்துசெய்தல்) சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்துவிட்டு தங்காலைக்குத் திரும்பினார்.

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது விதவைகள் மற்றும் ஓய்வு பெற்ற எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம், செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் எந்த திருத்தங்களும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version