இலங்கை

கொழும்பு மசாஜ் நிலையத்தில் சிக்கிய தாய்லாந்து அழகிகள்

Published

on

கொழும்பு மசாஜ் நிலையத்தில் சிக்கிய தாய்லாந்து அழகிகள்

கொழும்பு 7 – கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் நீண்ட காலமாக மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் இருந்து ஒன்பது தாய்லாந்து பெண்கள் உட்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நெற்று வெள்ளிக்கிழமை (03) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ் அதிகாரி ஒருவர் இந்திய பிரஜை போன்று மசாஜ் நிலையத்துக்குள் சென்று தகவல்களை திரட்டி பின்னர் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல வர்த்தகர்கள் இந்த விபச்சார விடுதிக்கு வருகை தருவதாக மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Advertisement

மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version