இலங்கை
தெஹிவளை ரயில் நிலைய துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் ஒருவர் கைது!
தெஹிவளை ரயில் நிலைய துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் ஒருவர் கைது!
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ய முயன்றதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 18 ஆம் திகதி, தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டுக்கு வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடம் இருந்து 50 கிராம் ஐஸ், 05 வாள்கள் மற்றும் ஒரு கத்தி ஆகியவை மீட்கப்பட்டன. அவர் கல்கிஸ்ஸையில் உள்ள சீவலி சாலைப் பகுதியில் வசிக்கும் 34 வயதுடையவர் என்று காவல் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை