இலங்கை

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பலர்

Published

on

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பலர்

   போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுவை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாளாந்த பொலிஸ் சுற்றிவளைப்புகள் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் முப்படையினரால் இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

Advertisement

அந்தவகையில் நேற்று (03) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகளைச் சேர்ந்த 6,644 பேர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது 27,727 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர், 10,900 வாகனங்கள் மற்றும் 8,385 மோட்டார் சைக்கிள்களும் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சோதனைகளின் போது, ​​போதைப்பொருள் தொடர்பாக 971 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பல்வேறு குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 21 பேர் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 449 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version