இலங்கை
யால சரணாலயத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை
யால சரணாலயத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை
கதிர்காமம் – வெஹெரகல நீர்த்தேக்கத்தை அண்மித்த யால சரணாலயத்தில், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் விசேட தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, வெஹெரலகல வாவியிலிருந்து மெகசின் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதை அடுத்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய குறித்த தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்போது, வெஹெரகல்ல வாவியிலிருந்து 215 T-56 ரக வெற்று மெகசின்கள், 38 LMG l வெற்று மெகசின்கள், 06 T-81 மெகசின்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த ஆயுதங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.