இந்தியா
நோபல் 2025: புதிய சிகிச்சைகளுக்கு வழிவகுத்த மூவருக்கு விருது!
நோபல் 2025: புதிய சிகிச்சைகளுக்கு வழிவகுத்த மூவருக்கு விருது!
உயிரியல் அல்லது மருத்துவத்திற்கான 2025-ஆம் ஆண்டின் நோபல் பரிசு, விளிம்புநிலை நோய் எதிர்ப்புச் சகிப்புத்தன்மை (Peripheral Immune Tolerance) தொடர்பான முக்கிய கண்டுபிடிப்புகளுக்காக, விஞ்ஞானிகளான மேரி இ. புருன்கோவ் (Mary E. Brunkow), ஃபிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஷிமோன் சகாக்குச்சி (Shimon Sakaguchi) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் (Karolinska Institute) ஒரு குழுவினரால் இந்த அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. நோபல் பரிசுகளின் வரிசையில் இது முதல் அறிவிப்பாகும். விளிம்புநிலை நோய் எதிர்ப்புச் சகிப்புத்தன்மை என்பது, நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு (Immune System), வெளியிலிருந்து வரும் நோய்க்கிருமிகளைத் தாக்கி அழிப்பதற்குப் பதிலாக, தன்னுடைய சொந்த திசுக்களைத் தாக்குவதைத் தடுக்கும் ஒரு வழிமுறையாகும்.”அவர்களின் கண்டுபிடிப்புகள் ஒரு புதிய ஆராய்ச்சித் துறைக்கு அடித்தளம் அமைத்துள்ளன. மேலும், புற்றுநோய் மற்றும் சுய நோயெதிர்ப்பு நோய்கள் (Autoimmune diseases) போன்றவற்றுக்கான புதிய சிகிச்சைகள் உருவாக்கப்படுவதற்கும் ஊக்கமளித்துள்ளன,” என்று நோபல் பரிசு குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 1901 மற்றும் 2024 ஆண்டுகளுக்கு இடையில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு 115 முறை 229 நோபல் பரிசு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசுத் தொகையாக சுமார் 1.2 மில்லியன் டாலர் மற்றும் உலகளாவிய அங்கீகாரம் ஆகியவை அடங்கும்.நோபல் பரிசுகள் அறிவிப்பு அட்டவணை:செவ்வாய்க்கிழமை: இயற்பியலுக்கான (Physics) பரிசுபுதன்கிழமை: வேதியியலுக்கான (Chemistry) பரிசுவியாழக்கிழமை: இலக்கியத்திற்கான (Literature) பரிசுவெள்ளிக்கிழமை: அமைதிக்கான (Peace) நோபல் பரிசுஅக்டோபர் 13: பொருளாதாரத்திற்கான நோபல் நினைவுப் பரிசுBREAKING NEWSThe 2025 #NobelPrize in Physiology or Medicine has been awarded to Mary E. Brunkow, Fred Ramsdell and Shimon Sakaguchi “for their discoveries concerning peripheral immune tolerance.” pic.twitter.com/nhjxJSoZErநோபல் பரிசுகள், அதன் நிறுவனர், சுவீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் மற்றும் தொழில்முனைவோருமான ஆல்ஃபிரட் நோபல் அவர்களின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று வெற்றியாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆல்ஃபிரட் ஐன்ஸ்டீன், நீல்ஸ் போர், மேரி கியூரி போன்ற விஞ்ஞானிகள்; எர்னஸ்ட் ஹெமிங்வே, ஆல்பர்ட் காம்யூ போன்ற எழுத்தாளர்கள்; மற்றும் நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், அன்னை தெரசா போன்ற முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் புகழ்பெற்ற நோபல் பரிசு பெற்றவர்களில் அடங்குவர்.