வணிகம்
நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி: மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம் என்ன?
நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி: மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம் என்ன?
அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காலை, மாலை எனத் தொடர்ந்து இரு நேரமும் விலை உயர்ந்து உச்சத்தைத் தொட்டு வந்த நிலையில், நேற்று (அக்டோபர் 10) காலையில் மட்டும் சற்று குறைந்தது. இது நகை பிரியர்களுக்கு சிறிது மகிழ்ச்சியைக் கொடுத்தது.ஆனால், நேற்றைய மாலை வேளையிலேயே தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.11,340 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.640 உயர்ந்து ரூ.90,720 ஆகவும் விற்பனை செய்யப்பட்டதுஇன்றைய (அக்டோபர் 11) நிலவரம்:இந்த நிலையில், இன்று அக்டோபர் 11ஆம் தேதி தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.22 கேரட் தங்கம்: இன்று கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425 ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.91 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.18 கேரட் தங்கம்: இதன் விலையும் உயர்ந்து, கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9,450-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,600-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்:வெள்ளி விலையும் தங்கத்தைப் போலவே புதிய உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.187-க்கும், ஒரு கிலோ ரூ.1,87,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது வரலாறு காணாத ஏற்றமாகப் பார்க்கப்படுகிறது.