டி.வி
அருணை அர மெண்டல் என்று திட்டிய முத்து.! பெட்டி படுக்கையுடன் கிளம்பிய சீதா
அருணை அர மெண்டல் என்று திட்டிய முத்து.! பெட்டி படுக்கையுடன் கிளம்பிய சீதா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்பதை விரிவாக பார்ப்போம். ஏற்கனவே மீனாவின் அம்மாவுடைய பூக்கடையை மீட்டெடுக்க அருணும் முத்துவும் முயற்சி செய்கின்றார்கள். அதில் முத்து மீனாவின் அம்மாவின் கடையை மீட்டெடுக்கின்றார். ஆனால் அந்த பாராட்டை அருணுக்கு வழங்குமாறு சொல்லுகின்றார். ஆனால் ஸ்ருதியின் ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவுக்கு வந்த கோகிலா முத்துதான் மீனாவின் அம்மாவுடைய கடையை மீட்டுக் கொடுத்ததாக உண்மையை சொல்லுகின்றார். இது சீதாவுக்கும் தெரிய வருகின்றது. இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் நடந்த விஷயங்களை சீதா அருணிடம் கேட்க, ஆமா உங்க மாமா தான் பெரிய ஹீரோ.. என்று சொல்லுகின்றார். இதை கேட்ட சீதா கோவத்தில் பாத்திரத்தை போட்டு உடைத்து விட்டு அம்மா வீட்டுக்கு வந்து விடுகின்றார்.. அங்கு வந்த முத்து மீனாவும் நீ என்ன கோவிச்சுட்டு இங்க வந்து உட்கார்ந்து இருக்க…. அவன் ஏதாச்சும் சொன்னா, நீயும் ரொம்ப கோவப்படாத… அவருக்கு போலீஸ் திமிரோட சேர்த்து கொஞ்சம் ஈகோவும் இருக்கு.. அப்பப்ப அர மெண்டல் மாதிரி நடந்து கொள்ளுவான் என்று சொல்ல, இதை உள்ளே இருந்து கேட்டுக் கொண்டு அருண் வெளியே வருகின்றார். இதன்போது நான் உள்ளே தான் இருக்கேன் என்று சொல்ல மாட்டியா என்று சீதாவை கேட்க, முத்து அதிர்ச்சியாக பார்க்கின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.