பொழுதுபோக்கு

வயசுல சின்ன பையன், இல்லனா கால்ல விழுந்துருப்பேன்; பிரபல இயக்குனரை பாராட்டிய கே.பாலச்சந்தர்!

Published

on

வயசுல சின்ன பையன், இல்லனா கால்ல விழுந்துருப்பேன்; பிரபல இயக்குனரை பாராட்டிய கே.பாலச்சந்தர்!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் பாரதிராஜா. இவர் திரைத்துறையின் மிகப்பெரிய ஆளுமையாக இருக்கிறார். இயக்குநர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட பாரதி ராஜா கடந்த 1977-ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று இவர் குரலில் ஒலிக்கும் டயலாக்கை கேட்கவே ரசிகர்கள் பலரும் காத்து கிடப்பார்கள்.இவரின் முதல் படமே மிகப்பெரிய வெற்றியை தந்தது. தொடர்ந்து, ’கிழக்கே போகும் ரயில்’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ’அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல் ஓவியம்’, ‘மண்வாசனை’, ‘தாஜ்மஹால்’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்களுக்கு வசப்படாத ரசிகர்களும் இல்லை புகழும் இல்லை. அப்படி இயக்குநராக கொடிக்கட்டி பறந்தவர் பாரதிராஜா. தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா சமீபத்தில் காலமானார். தன் மகனை இழந்த துக்கத்தில் இருக்கும் பாரதிராஜாவிற்கு நினைவுகள் மங்கி வருவதாக கூறப்படுகிறது. இயக்குநர் பாராதிராஜாவின் படங்களை பார்த்த கே.பாலசந்தர் ‘வயதில் சிறியவன் இல்லையென்றால் காலில் விழுந்திருப்பேன்’ என்று பாரதிராஜாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த அனுபவங்களை  இயக்குநர் கே. பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.அவர் பேசியதாவது, ”கலைஞர்கள் எல்லாம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் தானே. அதனால் தானே காட்சிகளை எழுதுகிறார்கள். பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தை பார்த்து கே.பாலசந்தர் மிகவும் பிரம்மித்துவிட்டார். கமலுக்கு கூட கே.பாலசந்தர் கடிதம் எழுதினார். அதன்பிறகு, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘புதிய வார்ப்புகள்’ போன்ற படங்கள் வந்தது. அதை பார்த்துவிட்டு தான் வயதில் சிறியவன் இல்லையென்றால் காலில் விழுந்துவிடுவேன் என்று கே.பாலசந்தர், இயக்குநர் பாரதிராஜாவிற்கு கடிதம் எழுதினார். இதனை பார்த்த பத்திரிகையாளர்கள் கே.பாலசந்தர் உங்களுக்கு எதுக்கு இந்த தாழ்வு மனப்பான்மை என்று எழுதியிருந்தார்கள். அப்போது பத்திரிகையாளர்கள் எல்லாம் எவ்வளவு பொருப்பாக இருந்திருக்கிறார்கள் என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எங்கள் மீது உள்ள அன்பினால் அவர்கள் அப்படி கூறினார்கள்” என்றார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version